Posts

Showing posts from January, 2022

இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'​-​கிறுக்கல் 4​

  இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும்'​ எழுத உட்கார்வதற்கு முன் யோசித்து பார்த்தால்  எழுத வருவதில்லை. எந்த நிமிடம் நம்மிடம் பேனாவோ , லேப்டாப்போ இல்லையோ அப்போது அப்படி ஒரு கற்பனை ஓட்டம். என்ன வென்று கேட்டகிரிர்களா?, இன்று நான் பூஸ்டர் டோஸ் இன்ஜெக்ஷன் போட சென்றிருந்தேன். 10.30 மணி காலை , இந்தியாவில் மணி 12, என் பிறந்தநாள் தொடங்கிவிட்டது. என் இனிய ஸ்நேகிதி கிருஷ்ணா பாண்டிச்சேரியில் இருந்து தொலை பேசியில் கூப்பிட்டாள். ! நினைவுறுத்தினாள் இன்று என் பிறந்த நாள் என்று!!! நம் பிறந்தநாளை நம்மை விட நாம் விரும்பும் 4 பேர் நினைவுறுத்தும் போது வரும்   சந்தோஷம் தனி தான் ! மீண்டும் பூஸ்டர் ஊசிக்கு வருவோம்.  பூனைக் கண்கள், சுமாரான உயரம் , blonde லுக்ஸ் இருந்த இந்த பெண், எந்த நாட்டவராக இருப்பாள் என்று யோசித்தேன் (வேண்டாத வேலை தான்) இப்போதெல்லாம் இப்படி யோசித்து ஒருவரை பார்ப்பது வழக்கமாகிவிட்டது.  ஏன்? இந்த அமெரிக்காவின் குடிமக்கள், உலகம் முழுவதிலும் வந்து சேர்ந்தவர்கள் தானே, இவர்களின் பூர்வீகம் வெவ்வேறு உலக நாட

இதயத்தின் கிறுக்கல் 3

  சும்மா !!!!! நின்று மேலே பார்த்தால், இந்த சியாட்டில் நகரத்தின் மேகங்கள் கூட அவசரமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன !அந்த 17வது மாடி பால்கனியில் இருந்து கீழே வளைந்து செல்லும் முதல் அவென்யூவிலும்  சரி, மேலே விரிந்து  கிடக்கும் வானமும், சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரியும் பரந்த   இயற்கையும் சரி மிக உன்னதமான அமைதியையும் கவனித்து பார்க்க பார்க்க உற்சாகத்தையும் தருகிறது. மேகங்கள் மெதுவாக ஆனால் அவசரமாக காற்றடித்து போர்ட்லேண்ட் பக்கம் செல்லும் போது, மனதில் சின்ன எண்ணம், மேகம் போல காற்றடிக்கும்  திசையில் நகர்ந்து செல்ல மனிதனால் முடியுமா? முடியுமாவா ?? அதை விட வேகமாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் மனதின் ஓட்டத்தில் !!!  இறங்கி தெருவில் நடந்து செல்கிறேன், ஸ்னேஹமாக ஹாய் என்னும் சிலர், டௌன்டவுன் என்பதால் நிறைய டூரிஸ்ட்கள், வழக்கமாக நான் காய்கறி வாங்கும் கடையில் பணிபுரியும் நண்பர்கள், சினேகமாக சிரித்துக்கொண்டே,yo, whatsup '!'என்று தெருவோரத்தில் இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், அது ஒரு கலகலப்பான உற்சாகமான காலை நேரம். இங்குள்ள மனிதர்கள் உண்மையில் நண்பர்களா என்று யோசிக்காமல் மேலோட்ட
  இதயத்தின் கிறுக்கல் 1 இன்றய எண்ணங்கள்  நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' இது பாட்டு இல்லைங்க !  நினைப்பு தான் ! பிழைப்பை கெடுக்கும் ! பணமில்லாததால் பணம் தேடுவதும், அன்பு இல்லாததால் அன்பை தேடுவதும்  எப்போது பார்த்தாலும் எதையாவது தேடுவதும் தான் வாழ்வே என்ற உண்மையை மறக்கவோ மறுக்கவோ முடியாது.  தேடுவது எப்போது நிற்கும். எண்ணங்கள் நிற்கும்போது! சுதந்திரம் அடையும் போது . எண்ணங்கள் எப்போது நிற்கும் ? இப்படித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் இருந்து விடுபட்டால் சுதந்திரமா? என்றால் கிடையாது.  . ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கப்பால் சென்றால், உறவையும் சுற்றத்தையும் விட்டால், சுதந்திரம் இல்லை.   நம்மில் இருக்கும் எண்ணங்கள் நம்மை விட்டு செல்லும்போதுதான் சுதந்திரம். இவ்வாறாக அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவதுதான் வாழ்க்கையோ ? நீ பாட்டுக்கு சொல்லிவிட்டாய் நான் யார் என்று கேள் என்று..... கேட்டு கேட்டு சலித்து போய் என்னை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்றாலும் இன்னும் என்  தேடல் நிற்கவில்லை என் ரமணா !!!!!! எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான்   பாரதிதாசன்   இன்று அவன் உயிருடன் இருந்தால் எங்கெங்கு காணின
இதயத்தின் கிறுக்கல் 2   இன்று !!!! பழைய ஹிந்தி பாடல்கள்களுடன் நினைவுகளும் பின்னோக்கி செல்கிறது.  புதன்கிழமைகளில் ரேடியோ சிலோனில் அமீன் சயானியுடன் பினாகா கீத்மாலா ! அம்மா அப்பா சாரதா பாட்டி அந்த ரேடியோவை சுற்றி.... புரிந்தும் புரியாமலும் பாலு, நான், பாப்பு ...... மீண்டும் சிலவருடங்களுக்கு பிறகு மஞ்சயே கீத் , ஜெய்மாலா , பூலே பிஸ்ரேகீத் என்று விவிதபாரதியில் ... இன்று அந்த நாட்கள் கடந்து கைபேசியில் எல்லாம்... ஆனால் அந்த சந்தோஷம் பறந்து விட்டது ......  தேடுதுவது அதைத்தானோ! சந்தோஷத்தையா ? இல்லை நம்முடன் இருந்த உறவுகளையா ? நின்று திரும்பி பார்க்கும் போது ஒரு பெரிய திரைப்படம் போல ஓடுகிறது நம் கடந்த கால வாழ்க்கை .  உள்ளே நுழையும்போதே ஜெயம்மா என்று கூப்பிடும் GS, எப்போதும் பேசாமல் திடீரென்று ஜோக் அடிக்கும் அப்பா, சைக்கிளில் ஒரு கால் தரையில் ஒரு கால் வைத்துக்கொண்டு தலையை சாய்த்து பார்த்து 'மன்னி' என்று வாசலில் இருந்து கூப்பிடும் சம்பத், 'வாடா அம்மு' என்று உரிமையாக சம்பத்தை  உள்ளே கூப்பிடும் அம்மா, மனசு கோணாமல் எல்லோருக்கும் சாதம் போடும் பெரிய மன்னி, 'ங்கேன்னு நோஞ்சானா இருக்கா