Posts

ஒரு திரைக்கதை ஒரு குறும்படம் ​- தேவை---ஒரு துணை

  தேவை -ஒரு துணை  சென்ற நாட்கள் , கடந்த நினைவுகள்  இருப்பது நிகழ்காலம் -தனிமை வேண்டாமே .பழைய நினைவுகளில் மூழ்கும் போது அதை வெளிப்படுத்த ஒரு துணை தேவை என்றால் தேவைதான்  11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சந்திப்பில் உருவான அழகான இந்த உறவு. Montage  அனந்தன் படித்தால், கம்ப்யூட்டரில் வேலை செய்தல், செல் போனில் பேசுதல்  Jayy சமயல் அறையில் , இல்லை எனில் ஜன்னல் ஓரத்தில் படித்தால், podcast கேட்டல்,  laptopil  வேலை  ஒரே ஒரு சீன் தான்  Jayy:-ஹேய்  இன்னிக்கு 67 டிகிரி தான் வாக்கிங் போலாமா? ஆனந்த்:- ஓகே பட்டு(அவர் அப்படித்தானே  அழைக்கிறார்) ஜஸ்ட் 5 minitues. Montage   அப்பறம் என்ன இந்த Seattleஇன் கடற்கரை ஓரமாக பேசிக்கொண்டே நடந்து வருவதற்கும் பசி எடுப்பதற்கும் சீராக இருக்க ஒரு மெக்ஸிகன் உணவகத்தில் நுழைந்தனர் இருவரும். Jayy  in pensive  mood  ஆனந்த் என்ன நினைப்பாரோ தெரியவில்லை நான் நினைப்பது நிஜம்:) இது நிஜமா? அடிக்கடி இந்த கேள்வி எழும்.  ஒரு காபி குடிக்க , இந்த இயற்கையை ரசிக்க துணை வேண்டுமா என்றால் வேண்டும்தான். இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடம் இணை ந்து வாழ்வதுதானே.    Cut – dining Table சுடச் சுட காபி 

என்ன என்ன மாற்றங்களோ !

 என்ன என்ன மாற்றங்களோ ! எதை எழுதுவது ?எதை விடுவது? டெக்னாலஜியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அம்மியில் இருந்து அம்மா வரை எல்லாம் மாறிவிட்டன. இனி வரும் காலங்களில் இப்போதைய  போன்கள், ஜூம் மீட்டிங்குகள், சோசியல் மீடியா சமாச்சாரங்கள் எப்படி மாறும் என்று யோசித்தால், அப்பப்பபா தலை சுற்றுகிறது. இதோ என் பார்வை :- ஆசிரியர் இல்லாத வகுப்பறைகள், விரல் முனையால் எழுதக்கூடிய கரும்பலகைகள்,(lazer touch screens )மருத்துவர் இல்லாத அறுவைசிகிச்சைகள், சர்வர் இல்லாத சிற்றுண்டி சாலைகள், ஸ்விட்ச் இல்லாத சென்சாரில் இயங்கும் மின்சார விளக்குகள் ஆகியவை வந்துவிட்டன. சாலையெங்கும் தானியங்கி போலீஸ்காரர்கள், கணக்கு எழுதுபவர்கள்-அக்கவுண்டண்ட்கள் , admin டிபாட்மென்ட் , ஆடிட்டர்கள்,பேருந்துகள், ஆட்டோக்கள், விமானங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு, technolgy everywhere  இன்னும் உயிருள்ள அப்பா அம்மாவை போன்றே பேசக்கூடிய ரோபோடிக் அம்மா அப்பா, வளர்ப்பு பிராணிகள் ! வீடு வாசல் எங்கெங்கு பார்ப்பினும் இயந்திர மயம் இல்லை இல்லை மாயம். 5 வயது குழந்தைக்கு வண்டி ஓட்ட லைசென்ஸ் ஏனென்றால் வண்டி ஆட்டோமேட்டிக் தானே.  விதைக்கும் முன்னே விளைந்துவிடும்

இந்த சந்திப்பு.........

இந்த சந்திப்பு......... சன்பிரான்சிஸ்கோ  விமான நிலையத்தில் அந்த புட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்து கொண்டு தனியாக தன்  மகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இவர். ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. 'ஓ மை காட் ! dr.கேத்தலீன்  கரிக்கோ. இவர் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் MRNA வாக்சினை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர், இவருடைய நண்பர் dr.ட்ரு வைஸ்மன் இருவரும் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்களை  காப்பாற்றிய MRNA (messenger Ribonucleic acid- செய்தி பரிமாற்ற ரிபோநியூகிளிக் அமிலம்) கண்டுபிடித்தவர்கள். அவர்கள் இருவருடன் ஒரு 16 மணி நேர பயணம். நடு நடுவே புன்னகை பரிமாற்றம். இந்த இரண்டு பேர்கள் மட்டுமின்றி டாக்டர் பீட்டர் க்யூல்லிஸ்(இவர் வாக்சினை ரத்தத்தில் செலுத்தும் முறையை கண்டுபிடித்தவர்) அடங்கிய குழவிற்கு 'கிராண்ட் அவார்ட்' வின் பியூச்சர் அவார்ட்ஸ்(VINFUTURE AWARDS -VIN group of companies) வழங்கியது .இந்த விழா  ஹனோய் வியட்நாம் நகரத்தில் 19 ஜனவரி 2022 அன்று நிகழ்நதது. இவர்கள் கண்டுபிடிப்புக்கு உலகத்திலேயே  முதன் முறையாக  3 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் பரிசாக வழங்க பட்டது.  M

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!  இடம் சென்னை-தமிழ்நாடு-இந்தியா  மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் வெள்ளீஸ்வரர் கோயில் வாசலில் இருக்கும் பூக்காரி செங்கமலம், சாமிநாதனை பார்த்து சிரித்தவாறே 'என்ன அய்யா கல்யாணமா ?'என்றாள்.'அமாம்.பத்திரிகை வந்தவுடன் தரேன், கண்டிப்பா வந்துடு. கல்யாணம் முடியறவரைக்கும் கூட ரெண்டு முழம் பூ குடுத்துடு' என்றவாறே பூவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். கோயில் வாசலில் வெளியே வந்து கொண்டிருந்த குருக்களும் 'கல்யாணமா? கேள்விப்பட்டேன், சந்தோஷம் மாமா'! என்றார். 'ஆமாம்' வாங்கோ, கண்டிப்பா' என்றார் ஸ்னேஹமாக சிரித்துக்கொண்டே. வீட்டிற்கு வந்தவுடன், தன்னுடைய நோட்டுப்புத்தகத்தில் கல்யாண அழைப்பிதங்கள் பக்கத்தை திறந்து, பூக்காரி செங்கமலம் , கோயில் விஸ்வநாத குருக்கள் என்று எழுதிக்கொண்டார். உள்ளிருந்து தண்ணீர் கொண்டுவந்த மனைவியிடம் 'லட்சுமி, இதுவரைக்கும் 321பேர் ஆயிடுது, உனக்கு தெரிஞ்சவா யாராவது இருந்த இந்த பக்கத்தில எழுதிடு, யாரும் விட்டு போய்ட கூடாது கேட்டியா,' என்றார். லக்ஷ்மியும் 'நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம், இருந்திருந்து முதல் கல்யாணம

நாலு பேர் 

நாலு பேர்  வெகு நாட்களாக ஒரு கேள்வி ! எவ்வளவு நாட்களாக என்று கேட்கிறீர்களா? சிறு வயதிலிருந்தே ! இந்த நாலு பேர் யார்? எப்ப பாத்தாலும் நாலு பேர் என்ன சொல்லுவா, நாலு பேர் பாத்தா என்ன ஆகும், நாலு பேர் எப்படியெல்லாம் பேசுவா ? இன்னிக்கு நான் பார்க்க ஆசைப்படறேன் அந்த நாலு பேர் யாரு? சின்ன வயதில் போட்ட விதை ஒரு தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்க, தன்னிச்சையாக ஒரு முடிவெடுக்க இல்லை நம் மனதில் பட்டதை சொல்லவும் தயக்கம், பயம், குழப்பம், கோழைத்தனம், திரைமறைவுக்கு பின்னால் ஒரு நடத்தை, முன்னே ஒரு நடத்தை.... இன்னும் என்ன என்னவோ சொல்லிக்கொண்டு போகலாம்.எங்கோ கண்ணுக்கு தெரியாத நாலு பேருக்கு பயப்படும் மனிதர்கள், தனிமையில் கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள். ஏன் இந்த நாலு பேர் நம் வாழ்வை சிதைக்க அனுமதிக்க வேண்டும்.திரைமறைவிற்கு பின்னல்...hypocracy ! நல்ல பெரிய பொசிஷனில் வேலை பார்ப்பவர்கள், சமுதாயத்தின் மேல் மட்டத்தில் மிக மதிக்கப்பட்டவர்கள் , பக்திமான்கள், நல்ல குடும்பத்தை சேர்ந்த நல்லவர்  என்று மதிக்கப்படுகிறவர்கள், பதிவிரதையாக நடை உடை பாவனைகள் கொண்ட பெண்கள், நான் குறிப்பிட்டிருக்கும் இந்த உதாரணங்களில் பெரும

 அம்மா---உன்னை காணாமல்

உன்னை காணாமல் !!!!  உலகில் மிக அறிய பெருமைக்குரிய ஒரு பிறப்பு என்றாலே அது தாய்தான்! ஈடு செய்ய முடியாத ஒரு உறவு. என்னுயிர் தந்த என் அம்மாவிற்கு இந்த நினைவஞ்சலி.  23 ஆண்டுகள் சென்றுவிட்டது. நீ இல்லாமல் எது நின்றது ? எல்லாரும் நிறைவான வாழ்க்கையை தான் வாழ்கிறோம். குறை ஒன்றும் இல்லை. அப்பாவின் , உன் ஆசீர்வாதம்  நமஸ்கரித்து  எழும் போது, 'சமத்தா இரு ஜெயம்மா' என்று சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. இன்னும் சமத்தாகிவிட்டேனா என்று சொல்ல நீ இன்று இல்லை. கணபதி காலனி கால வாழ்க்கையில்,  நீ பாட்டு கிளாஸ் எடுக்கும் அந்த காட்சியும், உன் கிளாசில் இருக்கும் என் ஸ்நேகிதிகள், அவர்களுடன் நமது குடும்பத்திற்கு உருவான அழகான ஸ்நேகங்களும், இன்னும் எத்தனையோ நினைவுகள் மனதில் கரை புரண்டு ஓடுகிறது.  இன்று நாம் எல்லோரும் சொல்லும் 'மதர்'ஸ் டே' ! உன் போன்ற பெண்களுக்கு என்றும் 'மதர்'ஸ் டே 'தான். எங்கள் நால்வரின் இந்த பரிணாம வளர்ச்சிக்கு நீதான் காரணம் ஆயினும் அப்பா உனக்கு தந்த சுதந்திரம், உன் மேல் அவர் வைத்திருந்த trust மிக முக்கிய காரணமும் கூட தான்.  சம்ப

என்ன வித்தியாசம்

அந்த ஞாயிறு இரவு 2 மணிக்கு சியாட்டிலில் வீடு வந்து சேர்ந்தோம். சிறந்த சந்தோஷமான 15 நாட்கள் உயிரினும் மேலான உறவு என் தம்பி கண்ணன், அன்பு தோழி ஜெயஸ்ரீ , அண்ணன் ரமேஷ்,அன்பான விஜி மன்னியுடன் ஒரு வாரம், நம் குழந்தைகள் என்று நான் நினைக்கும் ஆனந்தனின் மகன், மகள், அவர்களின் அன்பு காதலர்கள் என்று எங்கெங்கும் அன்புடன் சிரிப்புடன் வளைய வந்த நான் மிகவும் உயரத்தில் பறந்தேனோ என்னவோ? வந்தவுடன் இவர் களைப்புடன் , தொண்டை வலியும் ஜூரமும் இருந்ததால் கோவிட் டெஸ்ட் செய்து அதில் நிரூபணமும் ஆகிவிட்டது. தரையில் இறங்கி மனது சம நிலைக்கு வந்தது.... Checks அண்ட் balance இதுதானோ? நிற்க எழுத நினைத்தது இதை அல்ல . ஆஸ்டினில் கண்ணனின் நாடகம் 'பாட்டி ஆனாலும் பார்ட்டி' விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த அரங்கத்தில் இருந்த 200 பேருக்கும் அந்த இரண்டு மணி நேரம் சொந்த பிரச்சினைகள் மறந்த ஒரு மகிழ்ச்சியான அனுபவம் . எல்லோரும் வந்து கண்ணனிடம் வாழ்த்திவிட்டு செல்லும்போது நானே அவனை பெற்றது போல பூரிப்பு. மெக்ஸிகோவில் playa del carmen என்ற நகரம் Cancun என்ற நகரத்தின் அருகாமையில் உள்ளது. இங்கு குடும்பமாக நாங்கள் ஊர் சுற்றி