Posts

Showing posts from May, 2022

 அம்மா---உன்னை காணாமல்

உன்னை காணாமல் !!!!  உலகில் மிக அறிய பெருமைக்குரிய ஒரு பிறப்பு என்றாலே அது தாய்தான்! ஈடு செய்ய முடியாத ஒரு உறவு. என்னுயிர் தந்த என் அம்மாவிற்கு இந்த நினைவஞ்சலி.  23 ஆண்டுகள் சென்றுவிட்டது. நீ இல்லாமல் எது நின்றது ? எல்லாரும் நிறைவான வாழ்க்கையை தான் வாழ்கிறோம். குறை ஒன்றும் இல்லை. அப்பாவின் , உன் ஆசீர்வாதம்  நமஸ்கரித்து  எழும் போது, 'சமத்தா இரு ஜெயம்மா' என்று சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. இன்னும் சமத்தாகிவிட்டேனா என்று சொல்ல நீ இன்று இல்லை. கணபதி காலனி கால வாழ்க்கையில்,  நீ பாட்டு கிளாஸ் எடுக்கும் அந்த காட்சியும், உன் கிளாசில் இருக்கும் என் ஸ்நேகிதிகள், அவர்களுடன் நமது குடும்பத்திற்கு உருவான அழகான ஸ்நேகங்களும், இன்னும் எத்தனையோ நினைவுகள் மனதில் கரை புரண்டு ஓடுகிறது.  இன்று நாம் எல்லோரும் சொல்லும் 'மதர்'ஸ் டே' ! உன் போன்ற பெண்களுக்கு என்றும் 'மதர்'ஸ் டே 'தான். எங்கள் நால்வரின் இந்த பரிணாம வளர்ச்சிக்கு நீதான் காரணம் ஆயினும் அப்பா உனக்கு தந்த சுதந்திரம், உன் மேல் அவர் வைத்திருந்த trust மிக முக்கிய காரணமும் கூட தான்.  சம்ப

என்ன வித்தியாசம்

அந்த ஞாயிறு இரவு 2 மணிக்கு சியாட்டிலில் வீடு வந்து சேர்ந்தோம். சிறந்த சந்தோஷமான 15 நாட்கள் உயிரினும் மேலான உறவு என் தம்பி கண்ணன், அன்பு தோழி ஜெயஸ்ரீ , அண்ணன் ரமேஷ்,அன்பான விஜி மன்னியுடன் ஒரு வாரம், நம் குழந்தைகள் என்று நான் நினைக்கும் ஆனந்தனின் மகன், மகள், அவர்களின் அன்பு காதலர்கள் என்று எங்கெங்கும் அன்புடன் சிரிப்புடன் வளைய வந்த நான் மிகவும் உயரத்தில் பறந்தேனோ என்னவோ? வந்தவுடன் இவர் களைப்புடன் , தொண்டை வலியும் ஜூரமும் இருந்ததால் கோவிட் டெஸ்ட் செய்து அதில் நிரூபணமும் ஆகிவிட்டது. தரையில் இறங்கி மனது சம நிலைக்கு வந்தது.... Checks அண்ட் balance இதுதானோ? நிற்க எழுத நினைத்தது இதை அல்ல . ஆஸ்டினில் கண்ணனின் நாடகம் 'பாட்டி ஆனாலும் பார்ட்டி' விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த அரங்கத்தில் இருந்த 200 பேருக்கும் அந்த இரண்டு மணி நேரம் சொந்த பிரச்சினைகள் மறந்த ஒரு மகிழ்ச்சியான அனுபவம் . எல்லோரும் வந்து கண்ணனிடம் வாழ்த்திவிட்டு செல்லும்போது நானே அவனை பெற்றது போல பூரிப்பு. மெக்ஸிகோவில் playa del carmen என்ற நகரம் Cancun என்ற நகரத்தின் அருகாமையில் உள்ளது. இங்கு குடும்பமாக நாங்கள் ஊர் சுற்றி