Posts

சிறுகதை-8-பார்கவி '

சிறுகதை -8 பார்கவி ' பீமண்ண முதலி வீதி என்ற ஞாபகம் . 1960 இல் இருந்து 80 வரையில்   அடிக்கடி சென்று வந்த ஒரு அழகான வீடு , வீடு என்பதைவிட விசாலமான பங்களா . அந்த வீட்டின் காம்பௌண்டு சுவற்றில் இருந்து , கேட் வரை ஒரு அழகு . கேட்டை திறந்து உள்ளே சிறிது நடந்து வீட்டின் வாயிற்படியில் ஏறியவுடன் ஒரு அரை வட்ட தாழ்வாரம் போன்ற ஒரு பலகணி . அதில் பிரம்பு நாற்காலிகள் , பெரும்பாலும் அங்கேதான் கண்ணாமணி மாமா அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருப்பார் . அதை தாண்டி உள்ளே சென்றால் , மிக பெரிய ஒரு ஹால் , சுமார் 30 பேர் ஒரே முறையில் அமர்ந்து சாப்பிட முடியும் . அதை தாண்டி    ஒரு விசாலமான சமயல் அறை . ஹாலின் முன்புறத்தில் இரண்டு அறைகள் . சமயல் அறையை தாண்டி பின்புறம் கொல்லைப்புறம் , சுற்றிலும் மரங்கள் , விளையாட நிறைய இடம் , முன்புறம்   நித்யமல்லி கொடி பூத்து   குலுங்கிவண்ணம் இருக்கும் . உள்ளே நுழயும்போதே நல்ல நறுமணம்   வீசும் . சுசி மாமியும் விஜயம் மாமியும் ,  தலை நிறைய அந்த பூக்களை அழகாக தொடுத்து தலையில் வைத்துக

சிறுகதை--6-எங்கே எனது ?

சிறுகதை --6   எங்கே எனது ????? எங்கே எனது ????? மாடியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த ராஜிக்கு அந்த பரந்த மொட்டை மாடி மிக  ஊக்கமூட்டுவதாக இருந்தது. வேலையில் இருந்து சுய ஓய்வு பெற்ற பின்தான் சில விஷயங்கள் கவனத்திற்கு வருகிறது என்று நினைத்தாள். இந்த மாடியை நாம் இத்தனை வருடங்களில் ரசித்தது கிடையாது, ஏன்  நினைத்தது கூட கிடையாது, அதுவும் மூன்றாம் மாடியில் குடியிருந்து  கொண்டே நாலாவதாக இருக்கும் இந்த பரந்த திறந்த வெளியான மாடியை சீண்டியது கூட கிடையாது. இப்போது இந்த காலை பொழுது மிக உற்சாகமூட்டுவதாக தோன்றியது. நான்காவது சுற்றை முடிக்கும்போது செல் போனில் மணியை பார்த்தாள்  6.45  .... ஹ்ம்ம்ம் உலகம் முழுவதும் கொரோனாவில் (விடுப்பு) வீட்டில் இருந்து வேலை  செய்(வதாக)தாலும், தன்  கணவன் கிளம்ப வேண்டும் என்றவாறு கீழே இறங்கினாள். சமையல் அறையில் நுழைந்தவள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் வேகத்தில், அன்றைய சமையலை மனதில்  பட்டியல் போட்டு, காய்கறியை fridge இல் இருந்து எடுத்தாள், காபி பில்டர் போட்டுவிட்டு ,  பாலை காஸில் ஸ்லோவாக வைத்துவிட்டு குளிக்க போனாள். மனம் முழுவதும் மாடியும், ராகமாக ரயில்கள் செல்லும் ஓசையும் நிழலாட, அ

சிறுகதை-7 சரணாகதி !!!! அப்பாவின் wisdom !!!

சிறுகதை -7 சரணாகதி !!!! அப்பாவின் wisdom !!!  அப்பா   மெலிந்த   தேகம் , வெண்மையான   நிறம் , சுமாரான   உயரம் , கருகருவென்ற தலை முடி , அவரின் மனதை போலவே   வெள்ளை வேஷ்டி , வெள்ளை ஷர்ட்  , இரண்டும்   கதரில்தான் வெகுநாட்கள் வரையில் . வாட்ச்   கட்ட மாட்டார் , வெகுநாட்கள்   செருப்பும் போடாமலிருந்தார் . என் முதல் சம்பளத்தில் நான் அவருக்கு   வாங்கிய   பரிசு ஒரு ஜோடி லெதர்   செருப்பு  )  என் அப்பா எனக்கு   ஒரு ரோல் மாடல் . கையில்   இருக்கிறதோ இல்லையோ   கொடுக்க வேண்டும் , யாரென்று   பார்க்காமலே   கொடுக்கும்   மனது , என்று சொல்லாமல் நடந்து காட்டியவர் . விஷயத்திற்கு வருவோம் , நான் 3 ஆவது வகுப்பு , பாலு 5 ஆவது , பாப்பு  ( அப்போதெல்லாம் அவன் பாப்பு தான் , இன்றும்   எனக்கு   அவன் பாப்புதான் ), கண்ணன் , இன்னும் சிறியவர்கள்  ' மயிலாப்பூர்   முண்டக்கண்ணி அம்மன் கோயில் ஒட்டிய ஓட்டு வீடு , 30/ ஏ முண்டகண்ணியம்மன்   கோயில் ஸ்ட்ரீட் என்ற விலாசத்தில்   குடியிருந்தோம் .. சம்பவம் நடந்த அன்று நாங்கள் அனைவரும் வெவ்வேறு பள்ளிகளில் இருந்தோம் . அன்று அ