உறவும் பிரிவும் !!!!!

உறவும் பிரிவும் 
பகல்  வருவதால்தான் தான் இரவு முடிகிறது. விளக்கு வைத்தால் இருள் விலகுகிறது ......ஹ்ம்ம்ம் உறவுகள் இருப்பதால்தான் பிரிவுகள் வருகிறது..... பிரிவில்தான் உறவின் அருமை தெரியும் போல.
2005ல் ஸ்கூல் போக வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் அடிக்கடி தோன்றியது. (2006ல் Talentia என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஒரு அவதாரம் ). 
என்னிடம் வேலை செய்த பிரிசில்லாவோடு பள்ளி சென்றேன். வகுப்பு ஆசிரியைகளில் ஒருவரான பிலோமினா மிஸ் மரணம் பற்றி கேட்டவுடன் ரோஜா கலர் சீருடை அணிந்த ஜெயந்தியின் மனம் நொந்தது. கண்டிப்பாக அவர் சவப்பெட்டியில் கூட அதேபோல் தலையில் காதோரத்தில் ஒற்றை ரோஜாவுடன் அழகாக பின் செய்த புடவையுடன் ,சிக் என்ற ரவிக்கை, மேட்ச்சாக போட்டுக்கொண்ட அழகாக இருந்திருப்பார் என்று ஒரு கணம் தோன்றியது.
டீச்சரை நேசிக்காத ஸ்டுடென்ட்ஸ் கிடையாது.அது ஒருவிதமான காதல்,பக்தி. முதற்காதல் பள்ளியில் அநேகம் பேர்களுக்கு அவர்கள் டீச்சருடன் ​தா​ன்,ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி.

மிஸ்.ஆக்னஸ் குள்ளமான​, ​கல்யாணம் செய்து கொள்ளாத ஆனால் கன்னியாஸ்திரி ஆகாத 'கருப்புடீச்சர். கண்களில் ஒரு ஒளி.அழகான குறுகுறு சிரிப்பு. என்னுடைய இன்றய ஆங்கில வல்லமைக்கு பின் உள்ள பெரிய சக்தி. இவரும் காற்றில் கலந்துவிட்டார்.​  ​பிரிசில்லா நேரமாகிறது  என்று வீட்டிற்கு சென்று விட்டாள்.

​ன்​யாஸ்திரி மடம் உள்ள கட்டிடம் முகப்பு மாறியிருந்தது. அந்த கட்டிட வாசலில் உள்ள பறந்து விரிந்த அரசமர நிழலில் உட்கார்ந்தேன். சிந்தனைகள் பின்னோக்கி கட்டவிழ்ந்து ஓடியது.
ஒரே பிளாஷ் back. இதே பள்ளி வளாகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் சிஸ்டர் ரோஸெலி பால்சிஸ்டர் பவுலின் ..ஹ்ம்ம்ம் .. மயிலாப்பூர், புனித ரபேல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தான் நான் 11வது வகுப்பு முடித்தேன். அப்போது மதர் சுப்பீரியர் சிஸ்டர் ரோசலி பால். மென்மையான புன்சிரிப்புஅதிராமல் ஒரு நளினமான நடைஅதிர்ந்து பேசி கேட்டதே கிடையாது. 
அந்த காலத்தில் கன்னியாஸ்திரிகள் தூய்மையான வெள்ளை நிற அங்கி அணிவார்கள்,அதில் வலப்புறம் பாக்கெட் வைத்து தைத்திருப்பார்கள். அதில் சங்கிலியுடன்  கூடிய கடிகாரம் அணிந்திருப்பார்கள்கழுத்தில் கருப்பு ஜெபமாலையில்  ஜீசஸ் டாலர் அணிந்திருப்பார்கள். லேசான ஹை ஹீல் ஷூ. பள்ளி வராண்டாவில் அவர்கள் நடக்கும் போது ,அமைதியான பள்ளி நேரங்களில் அந்த ஷூவின் ஓசைமழை பெய்த பின் தூறல் தகரத்தில் விழுவது போல டொக் டொக் என்று ஒரு தாளக்கட்டுடன், ரிதததுடன் இருக்கும். அந்த இளம் வயதில் மனதில் பதிந்தது அந்த உடை,சேவை மனப்பான்மைஎல்லாரிடமும் கனிவாக பேசும் மனப்பாங்கு,பொறுமையான  குணம் (இது எதுவும் என்னிடம் கிடையாது கருணையை தவிர)!!!! ம்ம்ம்ம் 
10வது படிக்கும் போது அப்பா புரிய வைத்தார்கன்னியாஸ்திரி ஆகாமலே அவர்களை போல உதவி புரியலாம்தொண்டு செய்யலாம் என்று.
தலைமை ஆசிரியை ரோசலி பால்!!!!! நான் வகுப்பில் இருந்ததை விட அவர் அறை வாசலில் இருந்ததுதான் அதிகம். எல்லா  நிகழ்ச்சிகளிலும் நான் ஆஜர். Fancy fete, inter school competition, science  exhibition  ஒன்று மாற்றி ஒன்று எல்லாவற்றிலும் நான் ஒரு அங்கம். இங்கு முக்கியமான விஷயம், என்ன என்றால் எனக்கென்று ஒரு பொறுப்பான பதவியும் கிடையாது,3/4 பங்கு வேலையை சிஸ்டர் சொல்லுவார் 1/4 பங்கு டீச்சர்ஸ் சொல்வார்கள்மேலும் ஒரு முழு பங்கு நானே செய்வேன். பெஞ்சு,நாற்காலி போடுவதில் இருந்துவிழா முடிந்து  எல்லோரும் போகும் வரை வண்டு போல ஓடிக்கொண்டே இருப்பேன். என்னுடன் சில சமயங்களில் y.ரேணுகா எப்போதும் M.S .பூரணி!! (முக நூலில் தேடியும் பூரணி கிடைக்கவில்லை..ஹ்ம்ம்) 
சிஸ்டர் பவுலின் மேத்ஸ் டீச்சர். இவர்தான் எனக்கு 9,10,11 வகுப்புகளில் மேத்ஸ் எடுத்தார். கணக்குக்கும் எனக்கும் எவ்வள்வு தூரம் என்று கணக்கிட எந்த பார்முலாவினாலும் முடியாது.  அனாலும் நன் 11ஆம் வகுப்பில் 74% வாங்கியதற்குகண்டிப்பு மிக்க ஆனால்  கனிவான அக்கறை கொண்ட சிஸ்டர் பவுலினின் கவனிப்பு தான் காரணம். 40 வருடத்திற்கு பிறகு அதே பள்ளியின் கன்னியாஸ்திரி மடத்தின் வாசலில் நான் காத்திருக்கிறேன் சிஸ்ட்டரை  பார்க்க!! மனதில் சின்ன உணர்வு,ஆயிரம் கேள்விகள்சிஸ்டர் என்னை மறந்து போயிருப்பாரா?, ஹ்ம்ம்.
உள்ளிருந்து வந்த சிஸ்டர் புடவைக்கு மாற்றி இருந்தார். ஏய் ஜெயந்தி சங்கரா ?என்றார்.
கண்களில் கண்ணீர் .   இது என்ன நிலை? சில பேர் முன்பு ரமணாஷ்ர உணர்வு. இதுதான் osho சொல்லும் satori state ??? 
என்னை கட்டி அணைத்து உச்சி மோந்தார்!! நெஞ்சின்  நெகிழ்ச்சி இருவரின் கண்களிலும் முத்துக்களாக உதிர்ந்தது. என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.நான் சொல்ல சொல்ல அவர்,ஏசுவே இதென்ன இந்த பிள்ளைக்கு சோதனை என்று வேதனை பட்டார்.
நானும் சிஸ்டரும் அடிக்கடி செல் போனில் பேசிக்கொண்டோம். அப்போதய தொழில் HR consulting , சிஸ்டர் சில பெண்களுக்கு வேலை வாங்கித் தரும்படி கேட்டார்.என்னால் அது இயலவில்லை என்பதில் எனக்கு ஏகப்பட்ட வருத்தம். 
3 , 4  மாதங்களாக நான் பிஸியாக இருந்தேன்,சிஸ்டரிடம் இருந்தும் போன் வரவில்லை. நான் முயன்றபோதும் சுவிட்ச் ஆப் என்ற செய்தி. மனதை ஏதோ பிராண்ட, பட்ட பகலில் ஆஃபிஸில் இருந்து பள்ளிக்கு ஓடினேன். மன பிராண்டல் உண்மையானது. சிஸ்டர் கேன்சரில் மூன்றே மாதத்தில் யேசுவிடம் சென்றுவிட்டார். அடக்க முடியாமல் அழுதேன். என்னை பார்ப்பதற்கென்றே அவர் தஞ்சாவூர் பள்ளியில் இருந்து ஒய்வு பெற்று இங்கு திரும்பியது போல தோன்றியது.கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அவரை சந்தித்த தருணங்கள் மனதில் நிழலாடியது. அமைதியான  மனதை வெற்றிடமாக்கியது இந்த பிரிவு.

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

வெகு நாட்களுக்குப் பிறகு