Posts

ஆஹா, இது மிக மிக அருமையான யோசனை.

டெல்லியில் இருந்து அண்ணாவும் கிளம்பிவிட்டான். அமெரிக்காவில் இருந்து அக்காவும் புறப்பட்டுவிட்டாள். அப்பாவுக்கு ஒரு நாள் முன்பு மிகவும் உடம்பு நலமில்லாமல் போக, டாக்டர் வந்து பார்த்துவிட்டு சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போனார். அப்பாவிற்கு எப்படி இருந்தாலும் 94 வயதாகி விட்டது, முடிய போகிற வாழ்க்கைதானே என்று எல்லோரும் அலட்சியமாக இருக்கும் பொழுது, அவர் சுறுசுறுப்பாக தனது வேலையை பார்த்துக் கொண்டு காலையில் எழுந்து, குளித்து, பூஜை முடித்து, தன் வேலையை பார்த்துக் கொண்டு தேமென்று இருப்பார். சாயங்கால வேலைகளை பளிச்சென்று நெற்றியில் விபூதி பட்டையாக இட்டுக் கொண்டு அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியில் இருக்கும் சீரியல்களை ஆறு மணிக்கு ஆரம்பித்து படுக்கச் செல்லும் வரை பார்ப்பார். இதற்கு நடுவில் ஏழே கால் மணிக்கு சென்று உணவு அருந்தி விட்டு வந்து விடுவார். இந்த டிவி சீரியல் பார்க்கும் பொழுது தான் அவருடைய கான்சென்ட்ரேஷன் எவ்வளவு என்று சொல்ல முடியாது. யார் வந்தாலும் தெரியாது, யார் போனாலும் தெரியாது. அணுகுண்டு விழுந்தால் கூட தெரியாது என்று சொல்லலாம். மதிய வேளைகளில் வரும

வெகு நாட்களுக்குப் பிறகு

வெகு நாட்களுக்குப் பிறகு வெகு நாட்களுக்குப் பிறகு எழுத உட்கார்ந்தேன் எதை எழுதுவது என்று புரியவில்லை. யோசித்துப் பார்த்தால் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இந்த அமெரிக்க இமிகிரேஷன் அலுவலகத்தில் குடிமக ளா க ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன். இன்றிலிருந்து இந்த நாட்டிற்காக நான் சண்டை போடுவதில் இருந்து எந்தவிதமான காரியமும் , இந்த நாடு மேம்படுவதற்காக செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.  மனதில் லேசாக வலித்தது  பறவைகளை ப்   பார்க்கும் பொழுது அவர்களுக்கு என்ன விசா தேவையா இல்லை ஒரு குடியுரிமை தான் தேவையா ?  எங்கு வேண்டுமானாலும் பறந்து சென்று கொண்டு சந்தோஷமாக  இருக்கின்றன . மீன்களைப் பார்த்தால் அந்த கடலில் இருந்து இந்த கடலுக்கு ம்,  இந்த கடலிலிருந்து அந்த கடலுக்கு ம், நதியில் இருந்து  கடலுக்கு ம்  என்று சென்று கொண்டே இருக்கின்றன. இயற்கை எல்லா இடத்திலும் தன் வேலையை பார்த்துக் கொண்டு சமத்தாக சென்று கொண்டிருக்கிறது.   ஆனால் இந்த மனிதர்களிடம் மட்டும் எத்தனை கட்டுப்பாடுகள் எத்தனை விதமான கஷ்டங்கள் என்று யோசித்துப் பார்க்கையில், நாமே நம் மனதால் ஏற்படுத்திக் சங்கடங்கள் தான் 

ஒரு திரைக்கதை ஒரு குறும்படம் ​- தேவை---ஒரு துணை

  தேவை -ஒரு துணை  சென்ற நாட்கள் , கடந்த நினைவுகள்  இருப்பது நிகழ்காலம் -தனிமை வேண்டாமே .பழைய நினைவுகளில் மூழ்கும் போது அதை வெளிப்படுத்த ஒரு துணை தேவை என்றால் தேவைதான்  11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சந்திப்பில் உருவான அழகான இந்த உறவு. Montage  அனந்தன் படித்தல், கம்ப்யூட்டரில் வேலை செய்தல், செல் போனில் பேசுதல்  Jayy சமயல் அறையில் , இல்லை எனில் ஜன்னல் ஓரத்தில் படித்தால், podcast கேட்டல்,  laptopil  வேலை  ஒரே ஒரு சீன் தான்  Jayy:-ஹேய்  இன்னிக்கு 67 டிகிரி தான் வாக்கிங் போலாமா? ஆனந்த்:- ஓகே பட்டு(அவர் அப்படித்தானே  அழைக்கிறார்) ஜஸ்ட் 5 minitues. Montage   அப்பறம் என்ன இந்த Seattleஇன் கடற்கரை ஓரமாக பேசிக்கொண்டே நடந்து வருவதற்கும் பசி எடுப்பதற்கும் சீராக இருக்க ஒரு மெக்ஸிகன் உணவகத்தில் நுழைந்தனர் இருவரும். Jayy  in pensive  mood  ஆனந்த் என்ன நினைப்பாரோ தெரியவில்லை நான் நினைப்பது நிஜம்:) இது நிஜமா? அடிக்கடி இந்த கேள்வி எழும்.  ஒரு காபி குடிக்க , இந்த இயற்கையை ரசிக்க துணை வேண்டுமா என்றால் வேண்டும்தான். இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடம் இணை ந்து வாழ்வதுதானே.    Cut – dining Table சுடச் சுட காபி  ஆ

என்ன என்ன மாற்றங்களோ !

 என்ன என்ன மாற்றங்களோ ! எதை எழுதுவது ?எதை விடுவது? டெக்னாலஜியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அம்மியில் இருந்து அம்மா வரை எல்லாம் மாறிவிட்டன. இனி வரும் காலங்களில் இப்போதைய  போன்கள், ஜூம் மீட்டிங்குகள், சோசியல் மீடியா சமாச்சாரங்கள் எப்படி மாறும் என்று யோசித்தால், அப்பப்பபா தலை சுற்றுகிறது. இதோ என் பார்வை :- ஆசிரியர் இல்லாத வகுப்பறைகள், விரல் முனையால் எழுதக்கூடிய கரும்பலகைகள்,(lazer touch screens )மருத்துவர் இல்லாத அறுவைசிகிச்சைகள், சர்வர் இல்லாத சிற்றுண்டி சாலைகள், ஸ்விட்ச் இல்லாத சென்சாரில் இயங்கும் மின்சார விளக்குகள் ஆகியவை வந்துவிட்டன. சாலையெங்கும் தானியங்கி போலீஸ்காரர்கள், கணக்கு எழுதுபவர்கள்-அக்கவுண்டண்ட்கள் , admin டிபாட்மென்ட் , ஆடிட்டர்கள்,பேருந்துகள், ஆட்டோக்கள், விமானங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு, technolgy everywhere  இன்னும் உயிருள்ள அப்பா அம்மாவை போன்றே பேசக்கூடிய ரோபோடிக் அம்மா அப்பா, வளர்ப்பு பிராணிகள் ! வீடு வாசல் எங்கெங்கு பார்ப்பினும் இயந்திர மயம் இல்லை இல்லை மாயம். 5 வயது குழந்தைக்கு வண்டி ஓட்ட லைசென்ஸ் ஏனென்றால் வண்டி ஆட்டோமேட்டிக் தானே.  விதைக்கும் முன்னே விளைந்துவிடும்

இந்த சந்திப்பு.........

இந்த சந்திப்பு......... சன்பிரான்சிஸ்கோ  விமான நிலையத்தில் அந்த புட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்து கொண்டு தனியாக தன்  மகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இவர். ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது. 'ஓ மை காட் ! dr.கேத்தலீன்  கரிக்கோ. இவர் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் MRNA வாக்சினை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர், இவருடைய நண்பர் dr.ட்ரு வைஸ்மன் இருவரும் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்களை  காப்பாற்றிய MRNA (messenger Ribonucleic acid- செய்தி பரிமாற்ற ரிபோநியூகிளிக் அமிலம்) கண்டுபிடித்தவர்கள். அவர்கள் இருவருடன் ஒரு 16 மணி நேர பயணம். நடு நடுவே புன்னகை பரிமாற்றம். இந்த இரண்டு பேர்கள் மட்டுமின்றி டாக்டர் பீட்டர் க்யூல்லிஸ்(இவர் வாக்சினை ரத்தத்தில் செலுத்தும் முறையை கண்டுபிடித்தவர்) அடங்கிய குழவிற்கு 'கிராண்ட் அவார்ட்' வின் பியூச்சர் அவார்ட்ஸ்(VINFUTURE AWARDS -VIN group of companies) வழங்கியது .இந்த விழா  ஹனோய் வியட்நாம் நகரத்தில் 19 ஜனவரி 2022 அன்று நிகழ்நதது. இவர்கள் கண்டுபிடிப்புக்கு உலகத்திலேயே  முதன் முறையாக  3 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் பரிசாக வழங்க பட்டது.  M

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!  இடம் சென்னை-தமிழ்நாடு-இந்தியா  மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் வெள்ளீஸ்வரர் கோயில் வாசலில் இருக்கும் பூக்காரி செங்கமலம், சாமிநாதனை பார்த்து சிரித்தவாறே 'என்ன அய்யா கல்யாணமா ?'என்றாள்.'அமாம்.பத்திரிகை வந்தவுடன் தரேன், கண்டிப்பா வந்துடு. கல்யாணம் முடியறவரைக்கும் கூட ரெண்டு முழம் பூ குடுத்துடு' என்றவாறே பூவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். கோயில் வாசலில் வெளியே வந்து கொண்டிருந்த குருக்களும் 'கல்யாணமா? கேள்விப்பட்டேன், சந்தோஷம் மாமா'! என்றார். 'ஆமாம்' வாங்கோ, கண்டிப்பா' என்றார் ஸ்னேஹமாக சிரித்துக்கொண்டே. வீட்டிற்கு வந்தவுடன், தன்னுடைய நோட்டுப்புத்தகத்தில் கல்யாண அழைப்பிதங்கள் பக்கத்தை திறந்து, பூக்காரி செங்கமலம் , கோயில் விஸ்வநாத குருக்கள் என்று எழுதிக்கொண்டார். உள்ளிருந்து தண்ணீர் கொண்டுவந்த மனைவியிடம் 'லட்சுமி, இதுவரைக்கும் 321பேர் ஆயிடுது, உனக்கு தெரிஞ்சவா யாராவது இருந்த இந்த பக்கத்தில எழுதிடு, யாரும் விட்டு போய்ட கூடாது கேட்டியா,' என்றார். லக்ஷ்மியும் 'நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம், இருந்திருந்து முதல் கல்யாணம

நாலு பேர் 

நாலு பேர்  வெகு நாட்களாக ஒரு கேள்வி ! எவ்வளவு நாட்களாக என்று கேட்கிறீர்களா? சிறு வயதிலிருந்தே ! இந்த நாலு பேர் யார்? எப்ப பாத்தாலும் நாலு பேர் என்ன சொல்லுவா, நாலு பேர் பாத்தா என்ன ஆகும், நாலு பேர் எப்படியெல்லாம் பேசுவா ? இன்னிக்கு நான் பார்க்க ஆசைப்படறேன் அந்த நாலு பேர் யாரு? சின்ன வயதில் போட்ட விதை ஒரு தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்க, தன்னிச்சையாக ஒரு முடிவெடுக்க இல்லை நம் மனதில் பட்டதை சொல்லவும் தயக்கம், பயம், குழப்பம், கோழைத்தனம், திரைமறைவுக்கு பின்னால் ஒரு நடத்தை, முன்னே ஒரு நடத்தை.... இன்னும் என்ன என்னவோ சொல்லிக்கொண்டு போகலாம்.எங்கோ கண்ணுக்கு தெரியாத நாலு பேருக்கு பயப்படும் மனிதர்கள், தனிமையில் கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள். ஏன் இந்த நாலு பேர் நம் வாழ்வை சிதைக்க அனுமதிக்க வேண்டும்.திரைமறைவிற்கு பின்னல்...hypocracy ! நல்ல பெரிய பொசிஷனில் வேலை பார்ப்பவர்கள், சமுதாயத்தின் மேல் மட்டத்தில் மிக மதிக்கப்பட்டவர்கள் , பக்திமான்கள், நல்ல குடும்பத்தை சேர்ந்த நல்லவர்  என்று மதிக்கப்படுகிறவர்கள், பதிவிரதையாக நடை உடை பாவனைகள் கொண்ட பெண்கள், நான் குறிப்பிட்டிருக்கும் இந்த உதாரணங்களில் பெரும